Monday, July 24, 2017

ஆடி மாசக் காத்து



கீதாம்மா வின் சிறப்பு கிராமிய விருந்து... மிக்க நன்றி கீதாம்மா!

ஆடி மாசக் காத்து போல ஆடுதம்மா மனசு, அதில்

அசையாத தீபம் போல எரியுந்தன் நெனைப்பு

(ஆடி)



ஆடியிலே கூழு காச்சி ஆத்தா ஒனக்குத் தரணும்

ஆசையாக அதக் குடிக்க வெரசா நீ வரணும்

பச்சரிசி அச்சு வெல்லம் பொங்க வெச்சுத் தரணும்

மச்ச விழி மாரியாத்தா இச்சை தீர்க்க வரணும்

(ஆடி)



ஓடி ஓடி அலஞ்சு தினம் பட்டதெல்லாம் போதும்

பாடிப் பாடிக் காலடியில் பணியவேணும் நானும்

நெனப்பெல்லாம் ஒன்னச் சுத்தி இருந்தாலே போதும்

கணக்காக இன்பமெல்லாம் தானா வந்து சேரும்

(ஆடி)


--கவிநயா

3 comments: