Monday, September 25, 2017

துர்க்கை!


சுப்பு தாத்தா வின் இனிய இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

துர்க்கை என்னும் நாமம் சொன்னால்

துன்பமெல்லாம் ஓடுமடி

துக்கமெல்லாம் தீருமடி, தன்னாலே, அந்த

சுவர்க்கம் வந்து சேருமடி முன்னாலே

(துர்க்கை)



சூலமேந்தி வருகையிலே

கோபங் கொண்ட காளியவள்

கோலவிழிப் பார்வையினால்

உலகைக் காக்கும் தாயுமவள்

(துர்க்கை)



ஞானியராய் இருந்தாலும்

மாயையிலே இழுத்திடுவாள்

மோகத்திலே வீழ்த்திடுவாள்

ஞானத்தையும் அளித்திடுவாள்



தீமை ஏழ்மை அச்சம் இவை

யாவற்றையும் அழித்திடுவாள்

தம்மை எண்ணித் தொழுபவர்க்கு

நன்மையெல்லாம் அளித்திடுவாள்

(துர்க்கை)


--கவிநயா 


2 comments:

  1. மிக்க நன்றி கவிநயாம்மா இங்கும் சேர்த்தமைக்கு..

    கீதா

    ReplyDelete
  2. சுப்புத் தாத்தா நன்றாக இருக்கிறது!

    கீதா

    ReplyDelete