Monday, May 7, 2018

அவள் பதமே தஞ்சம்


சுப்பு தாத்தா வின் இசையில்... குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

பரகதிக்குத் துணை பரா சக்தி, அவள்
பாதங்களே நமக்கு மகா சக்தி
(பர)

சிறு இதழ் நெளிவினில் குறு நகை தவழ்ந்திடும்
கருவிழிப் பார்வையில் பழ வினை கரைந்திடும்
நிலவெழில் முகத்தினில் கதிரொளி ஒளிர்ந்திடும்
சிவையவள் அருளினில் வரு வினை அகன்றிடும்
(பர)

அவள் பெயரைச் சொல்ல அகமது சுகம் பெறும்
அவள் புகழைப் பாட மனமது மகிழ்வுறும்
அவள் நினைவே தவம், அவள் பெயரே பலம்
அவள் அருளே இன்பம், அவள் பதமே தஞ்சம்
(பர)


--கவிநயா

No comments:

Post a Comment