Monday, May 14, 2018

இன்பமும் துன்பமும் ஒன்றாகும்





கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

இன்பமும் துன்பமும் ஒன்றாகும்
  அன்னை நீ மனம் வைத்தால் 
    அனைத்தும் நன்றாகும்
(இன்பமும்)

உன் நினைவொன்றே என் 
  நினைவாய் ஆன பின்னே
உன் பதமொன்றே என்
  நிழலாய் ஆன பின்னே
உன் விருப்பொன்றே என்
  விருப்பாய் ஆன பின்னே
உன் பணியொன்றே என்
  பணியாய் ஆன பின்னே
(இன்பமும்)

கனவெனும் வாழ்வினிலே
  நிஜமாய் நீ வந்தாய்
கவிதையின் வாக்கினிலே
  கருவாய் நீ வந்தாய்
மனமெனும் காட்டினிலே
  ஒளியாய் நீ வந்தாய்
அன்பெனும் வடிவாகி
  அருளை அள்ளித் தந்தாய்
(இன்பமும்)


--கவிநயா


No comments:

Post a Comment