Monday, May 28, 2018

கண்மணி உமையே!


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கண்மணி உமையே கருத்தினில் உனையே
இருத்திட அருள்வாய் விருப்புடன் வருவாய்
(கண்மணி)

சிரசினை பதத்தினில் வைத்தேன் தாயே
பரிவுடன் பத மலர் தருவாய் நீயே
(கண்மணி)

உனையெந்தன் துணையென மனதினில் கொண்டேன்
நினைவிலுன் திருமுகம் தினந்தினம் கண்டேன்
பிறைமதி சூடிய இறையுடன் வருவாய்
விடையினில் அவனுடன் அருளள்ளித் தருவாய்
(கண்மணி)


--கவிநயா

No comments:

Post a Comment