Tuesday, July 10, 2018

கவலையெல்லாம் தீர்ப்பாய்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கவலையெல்லாம் தீர்ப்பாய்
கனிவுடன் எமைக் காப்பாய்
(கவலையெல்லாம்)

சுந்தரி நிரந்தரி சந்த்ர கலாதரி
சங்கரி சியாமளை சதுர்முகி தாயேயென்
(கவலையெல்லாம்)

சித்த்த்தில் நீ இருந்தும்
சிந்தை கலங்குவதேன்?
உன் இருப்பை அறிந்தும்
உன்மத்த மாவதுமேன்?

புத்தியிலே வருவாய்
புத்தொளியைத் தருவாய்
நித்தமுன் தாள் பணிந்தேன்
நித்திலமே யருள்வாய்
(கவலையெல்லாம்)

--கவிநயா

No comments:

Post a Comment