Tuesday, July 24, 2018

உன் முகம் கண்டால்...



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உன் முகம் கண்டால் என் மனம் ஆறும்
உன் பெயர் சொன்னால் வருந் துயர் ஓடும்
(உன் முகம்)

சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவையுனைப் பணிந்திட சிவனருள் சேரும்
(உன் முகம்)

வதனத்திலே ஒரு குறு நகை தவழும்
இதயத்திலே அது ஒளியினை அருளும்
பருவத்திலே பெய்யும் மழையினைப் போலே
தருணத்திலே அருள் பொழியுமென் தாயே
(உன் முகம்)


--கவிநயா

No comments:

Post a Comment