Tuesday, July 17, 2018

தாமரை போல்...



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

தண்ணீரில் தவழ்கின்ற தாமரை மலர் போலென்
கண்ணீரில் தவழுமெந்தன் தாயுந்தன் கமல முகம்
(தண்ணீரில்)

வெந்நீராய் விதி வந்து வாட்டுகின்ற வேளையிலும்
பன்னீரைத் தெளித்திடும் தாயுன் வெண்மதி வதனம்
(தண்ணீரில்)

மலர் போலச் சிரித்திருப்பாய்; மதி போலக் குளிர்ந்திருப்பாய்
உள்ளத்தில் நிறைந்திருப்பாய்; உணர்வுக்குள் நிலைத்திருப்பாய்
அன்னையுன் முகம் நினைந்தால் அல்லலெல்லாம் அரண்டு விடும்
அன்போடு அமைதியும் ஆனந்தமும் தேடி வரும்
(தண்ணீரில்)


--கவிநயா



No comments:

Post a Comment