Tuesday, February 12, 2019

உன்னை நினைந்து...



உன்னை நினைந்து உள்ளம் உருகி
கண்ணீர் பெருக கருணை புரிவாய்
பிள்ளை மனமும் வெள்ளை குணமும்
கள்ளம் இல்லா அன்பும் தருவாய்
(உன்னை)

அம்மா என்றேன், அள்ளிக் கொண்டாய்
அடடா இனி ஏன் கண்ணீர் என்றாய்
(உன்னை)

உன் முகம் பார்த்தால் என் துயர் மறையும்
மகிழ்ச்சி என்னும் மழையில் அனுதினம் நனையும்
உன் புகழ் பாட என்னுள்ளம் நிறையும்
பதமே கதியென கிடந்திட விழையும்
(உன்னை)


--கவிநயா

No comments:

Post a Comment