Monday, February 25, 2019

உன் முகம்



ஒரு மனதாக உனை தினம் பாட
ஒரு வரம் தருவாய், கருதிட வருவாய்
(ஒரு)

திருமுகத் தாமரை நினைவினில் தவழ்ந்திட
திருவடி எந்தன் சென்னியில் பதிந்திட
(ஒரு)

கண்ணிலும் கருத்திலும் கண்மணி உன்முகம்
எண்ணிடும் எண்ணத்தில் மின்னிடும் உன்முகம்
பண்ணிடும் பனுவலில் பயின்றிடும் உன்முகம்
விண்ணையும் மண்ணையும் ஆண்டிடும் திருமுகம்
(ஒரு)



--கவிநயா

No comments:

Post a Comment