Monday, February 4, 2019

உன்னால் ஆகாததும் உண்டோ?



உன்னால் ஆகாததும் உண்டோ?
உமையவளே எந்தை துணையவளே, என்றும்
(உன்னால்)

உரவினைக் கண்டத்திலே
கரத்தினால் நிறுத்தி வைத்தாய்
அன்பு கொண்டு அன்னமிட்டு
ஈசன் பாவம் போக்கித் தந்தாய்
(உன்னால்)

பால் வடியும் வதனமுடன்
வாலைக் குமரியாக வந்தாய்
கோரக் காளியாக நீயே
வந்து உதிரம் குடித்தாய்
(உன்னால்)

மலயத்துவசன் பெற்ற சின்னஞ் சிறு கண்மணியே
தக்ஷன் அவன் வேண்டிப் பெற்ற தாக்ஷாயணியும் நீயே
கந்தன் கணபதியரைப் போற்றிக் காக்கும் தாயும் நீயே
அண்டங்களை ஆக்கி ஆளும் ஆதிபரா சக்திச் தாயே
(உன்னால்)


--கவிநயா

No comments:

Post a Comment