Monday, April 22, 2019

உன் முகம்



மூன்றாம் பிறை கண்டேன்
அதிலுன்னெழில் நுதல் கண்டேன்
முழுமதி யினைக் கண்டேன்
அதிலுன் திருமுகம் கண்டேன்
(மூன்றாம்)


கனவினிலுன் முகம் கவிதையிலுன் முகம்
நினைவினிலும் உன் முகம் கண்டேன்
நிற்கையிலுன் முகம் நடக்கையிலுன் முகம்
கிடக்கையிலும் உன் முகம் கண்டேன்
(மூன்றாம்)

என்னுள்ளம் சூழும் இருள் கண்டேன்
இருள் நடுவினில் திரு முகம் கண்டேன்
திருமுகத்தில் அருள் ஒளி கண்டேன்
ஒளியினில் இருள் விலகிடக் கண்டேன்
(மூன்றாம்)



--கவிநயா

No comments:

Post a Comment