Monday, April 8, 2019

நீயே என் தெய்வம்



உன்னையல்லால் ஒரு தெய்வம் உலகில் இல்லை
உன்னையன்றி வேறு நினைவு மனதில் இல்லை
(உன்னையல்லால்)

அண்டங்கள் ஈரேழும் படைத்தவளே
அன்னையென அரவணைத்துக் காப்பவளே
(உன்னையல்லால்)

உந்தன் திருநாமம் உச்சரித்தால் போதும்
பலபிறவியும் என்னை விட்டொழித்தே ஏகும்
உந்தன் பெயர் எந்தன் சிந்தையிலே வாழும்
அன்னையுன் ஒரு நோக்கில் துன்பமெல்லாம் தீரும்
(உன்னையல்லால்)


--கவிநயா

No comments:

Post a Comment