Monday, July 15, 2019

திருநாள்


உனை எண்ணும் நாளெல்லாம் திருநாளே, உன்னை
எண்ணா விட்டால் அது வெறும் நாளே, அம்மா
(உனை)

எண்ணத்திலே வந்து நெஞ்சத்திலே நுழைந்தாய்
கிண்ணத்திலே மதுவாய் இதயத்திலே நிறைந்தாய்
(உனை)

எண்ணியதெல்லாம் தரும் கற்பகத் தருவே
எந்தைச் சிவன் இடத்தில் திகழ்ந்திடும் திருவே
அகந்தையினை அகற்றி அகத்தினில் வருவாய்
குழந்தையென ஏந்தி அன்பினைப் பொழிவாய்
(உனை)



--கவிநயா

1 comment:

  1. Thanks for all your song lyrics.
    On what tune we should sing plz share audio if posst

    ReplyDelete