Tuesday, July 9, 2019

அம்மா என்றால் இன்பம்


எத்தனையோ பெயர்களுண்டு அம்மா உனக்கு, உன்னை
அம்மா என்றழைப்பதில்தான் இன்பம் இருக்கு
(எத்தனையோ)

அகிலமெல்லாம் பெற்றதனால் அன்புத் தாயம்மா, பெற்ற
அகிலமெல்லாம் காப்பதானால் அரசி நீயம்மா
(எத்தனையோ)

பலப்பலவாம் பாடல்களால் உன்னை நினைக்கிறேன், அந்தப்
பாடல் கேட்க நீ வரணும் என்று அழைக்கிறேன்
மௌனமாக இருப்பதுதான் உந்தன் தருமமோ, ஒரு
வார்த்தை எனக்குச் சொல்லி விட்டால் முத்து உதிருமோ?
(எத்தனையோ)


--கவிநயா

No comments:

Post a Comment