Tuesday, July 23, 2019

ஒரு முறை பார்க்க...



உன்னை ஒரு முறை பார்க்க
மடியினில் தலை சாய்க்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே

மானெனும் விழி நோக்க
தேனெனும் மொழி கேட்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே

பரிவுடன் நீ பார்க்க
கனிவுடனே சேர்க்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே

திருமுகம் நான் பார்க்க
கருவிழி நீர் கோக்க
மனமிது ஏங்குது தாயே, அதை
அறிந்து அருள் புரிவாய் நீயே


--கவிநயா

No comments:

Post a Comment