Monday, August 5, 2019

உன் பெயர்



உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்கும், அதைச்
சொல்லிச் சொல்லி எந்தனுள்ளம் களிக்கும்
(உன் பெயரை)

கரும்பெனும் உன் பெயரில்
இரும்பு உள்ளம் உருகும்
விழிகளின் பொழிவினிலே
வினைகளெல்லாம் அழியும்
(உன் பெயரை)

பருவத்தில் வரும் மழைபோல்
தருணத்தில் அருள் தாயே
கருணையின் மறு உருவே
விரைவினில் வருவாயே
(உன் பெயரை)

நாவினில் உன் நாமம்
நினைவினில் உன்னுருவம்
கவிதையில் நீ பொருளாய்
தினந் தினமும் அருள்வாய்
(உன் பெயரை)


--கவிநயா

2 comments: