Monday, November 25, 2019

எழில் முகம்



சித்தெமெல்லாம் உந்தன் முத்தெழில் முகமடி
சுற்றும் எந்தன் மனம் நித்தம் உன் திருவடி
(சித்தமெல்லாம்)

கடைவிழியின் திசை என் திசையாகாதோ
எனை விரட்டும் விதி எதிர்திசை ஓடாதோ
சிறுஇதழ் நெளிவினிலே துயரங்கள் தீராதோ
கருவிழியின் பொழிவில் மனம்தினம் நனையாதோ
(சித்தமெல்லாம்)

சடையணிந்த சிவனின் இடம் அமர்ந்த தாயே
இடம் தந்த பதியால் இடை மெலிந்தாய் நீயே
படம் எடுக்கும் நாகம் குடை பிடிக்கும் தாயே
எனைப் பிடித்த துன்ப வினை கெடுக்க வாயேன்
(சித்தமெல்லாம்)



--கவிநயா

1 comment: