Monday, March 2, 2020

உலகம் உனது


மனதுக்கு இதமான தாயே, என்
குரலுக்கு வருவாயோ நீயே?
(மனதுக்கு)

உலகமெல்லாம் உனது
உன் இல்லம் என் மனது
இதயத்தில் நீ இருந்தால்
இன்பமெல்லாம் எனது
(மனதுக்கு)

வில்லெனும் புருவம் வளைத்திடுவாய்
விழியெனும் அம்பினைத் தொடுத்திடுவாய்
மும்மலங்களையும் அழித்திடுவாய்
மலரடியென் சென்னியில் பதித்திடுவாய்
(மனதுக்கு)



--கவிநயா

No comments:

Post a Comment