Monday, July 6, 2020

பரப் ப்ரம்ம ஸ்வரூபிணி



பரப் ப்ரம்ம ஸ்வரூபிணீ

பரமேசி ஜகன்மாதா

(பர)

 

சிம்மத்திலே சீறும் சிம்ம வாஹினி

சிவனுடன் விடையேறும் பார்வதி தேவி நீ

நடனத்திலே களிக்கும் தில்லை சிவகாமி நீ

புவனத்தை ஆளுகின்ற புவனேஸ்வரியும் நீ

(பர)

 

தாடங்கத்தால் அன்றொரு நாள் தண்ணிலவை அமைத்தாய்

ஊமையைப் பேச வைத்தாய் கவிப் பெருக்கோட வைத்தாய்

வேதங்கள் போற்றிடவே வீற்றிருக்கும் தேவி

பாதங்கள் பற்றிக் கொண்டோம், காத்திட வருவாய் நீ

(பர)


--கவிநயா




No comments:

Post a Comment