Tuesday, December 1, 2020

கண் பாராய்

 

கதறி அழுகின்றேன்

கண் பாராயோ

பதறி ஆழைக்கின்றேன்

குரல் கேளாயோ

சிவனின் அருகிலே

சிலையானாயோ

மகளை மறந்திட்ட

தாயானாயோ

(கதறி)

 

பகல் இரவு யாவும்

            பயனின்றிப் போகிறதே

அகலாமல் துயரம்

            என்னைச் சுற்றி வாழ்கிறதே

சிலையோ இலையோ நீ

            என்னும் ஐயம் எழுகிறதே

எனினும் உன்னையன்றி

            கதியில்லை என்கிறதே

(கதறி)

 

சரணென் அடைந்த பின்னும்

            சஞ்சலங்கள் தீரவில்லை

முரணென் றறிந்த பின்னும்

            மனமேனோ தெளியவில்லை

கடை விழி நோக்கி விட்டால்

            கடைத் தேறிடுவேனே

தடையேதும் இன்றி

            தாளிணை அடைவேனே

(கதறி)


--கவிநயா




No comments:

Post a Comment