Monday, December 14, 2020

அஞ்சுக மொழியாள்

 



அஞ்சுக மொழியாள்

அஞ்சலென் றருள்வாள்

அத்தனுடன் அவள் வீற்றிருப்பாள்

அபயக் கரம் தந்து காத்திருப்பாள்

 

பக்தியுடன் அவளைச்

சித்தத்தில் வைத்தால்

நித்தமும் அவள் நமக்குத் துணை யிருப்பாள்

சுத்த உள்ளந்தனில் குடியிருப்பாள்

 

பங்கய விழியாள்

பரிவுடன் அருள்வாள்

பிள்ளையென நம்மைக் காத்திடுவாள்

பவ வினைகள் யாவும் களைந்திடுவாள்

 

செஞ்சடை யோனின்

நெஞ்சம் கவர்ந்தவள்

தஞ்சமென் றவர்க்கு அருள் புரிவாள்

கஞ்ச மலர்ப்பத நிழல் தருவாள்


--கவிநயா


No comments:

Post a Comment