Monday, February 22, 2021

பக்தி வேண்டும்

 


பக்தியைத் தருவாய் பார்வதியே

சித்த மலம் அறுப்பாய், சிந்தையிலே இருப்பாய்

(பக்தி)

 

அன்றாடம் உன்பாதம் தொழுதிடவும்

மன்றாடி உன் நிழலை நாடிடவும்

(பக்தி)

 

உடலோடு உயிர் தந்து ஆக்கி வைத்தாய்

பல ஜென்ம கர்ம பலன் கூட்டி வைத்தாய்

சதி செய்யும் விதி தன்னை ஓட்டிடுவாய்

மதியினில் உன் மதிமுகத்தை நாட்டிடுவாய்

(பக்தி)



--கவிநயா



No comments:

Post a Comment