Friday, September 10, 2021

ஆனையான அன்னை

 ஆனையான அன்னை

----------------------

அடியாரிடர் களைய,

       அன்பர் துன்பம் தொலைய

பிடியாய் உருவெடுத்த

      உமையன்னை,

 களிறான அரன் துணையில்

      கரிமுகனைப் பயந்தளித்த

திருநாளாம் சதுர்த்தியைக்

 கொண்டாடுவோம்


கஜாசுரனை வென்று 

       எலியாக்கி ஏறி வந்த

கலியுகக்கடவுளாம் கணபதியை

அன்னை நமக்களித்த 

நன் நாளாம் சதுர்த்தியில்

சிவசக்தி சுதனின் துதி பாடுவோம்.


(சம்பந்தரின் வலி வலப்பதிகம்->


பிடியதன் உருஉமை கொளமிகு கரியது த்

வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.)

No comments:

Post a Comment