அதன் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.
வேத நதி மூலமே வேதாந்த ரூபியே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி மதி மீதிலே நாத வடிவாகினை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சௌந்தர்ய லஹரி நீ சுந்தர ஜடாதரி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
எங்கெங்கு காணினும் தேவி உன் ரூபமே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
காடென்றால் வேற்காடு
மரமென்றால் வேப்ப மரம்
ஊரென்றால் கொல்லூரு
உறவெல்லாம் உன்னோடு
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்
மாங்காட்டு மீனாக்ஷி
மதுரையிலே மகமாயி
காஞ்சியிலே கருமாரி
தில்லையிலே கோலவிழி
சமயபுர காமாக்ஷி
மயிலையிலே ஸ்ரீகாளி
எப்படி நான் அழைத்தால் என்ன
நீதாண்டி என் தாயி
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்
சூலமேந்தி ஆடுகின்ற மாரியம்மா
காலமெல்லாம் காவலாக வாடியம்மா
சடையாண்டி கோபிப்பான்
முருகனுக்கும் கோபம் வரும்
கணபதிக்கோ பிடிவாதம்
மாயவனோ பாராமுகம்
நாளெல்லாம் சோதனையோ
தாயுன்னை நோகவிடும்
வாடியம்மா வாவா உந்தன்
நிம்மதிக்கே பூலோகம்
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்
பரமசிவன் மேனியிலே
நாகரூபம் ஆனவளே
வேற்காட்டுப் புற்றினிலே
படமெடுத்து நின்றவளே
குழந்தையம்மா நான் இங்கே
பாலூட்ட வருகின்றேன்
மகுடி ஒலி போலே எந்தன்
உள்மூச்சை விடுகின்றேன்
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்!