Tuesday, December 30, 2008

102. மாசில்லா மனம் வேண்டும்!





மாசில்லா மனம் வேண்டும்
ஆசைகள் அற வேண்டும்
பாசங்கள் விட வேண்டும்
நேசம்உன் னிடம் வேண்டும்

ஆணவ மே அற்ற
அன்பு மனம் வேண்டும்
மாயை எனும் மயக்கம்
மருண்டோ டிட வேண்டும்

அல்லும் பகலும் உன்னை
நினைந்திட வே வேண்டும்
உள்ளும் புறமும் நீயே
நிறைந்திட வே வேண்டும்

பற்றெலாம் விட்டு உன்னை
மட்டும்பற்றிக் கொள்ள வேண்டும்
பெற்றவளே உன்னை விட்டு
பிரியா திருக்க வேண்டும்!


--கவிநயா


8 comments:

  1. இனிய புத்தாண்டில் எல்லா வளமும் பெற அன்னையின் அருள் பெற வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  2. நன்றி ராகவ். உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தங்கள் பாடல் இந்தக் கோவிலில் ஒலிக்க நான் கேட்டேன். ஏதோ முதியவர் பாடுகிறார். குரல் நடுங்குகிறது. பக்தி பரவசத்தில் நா தழு தழுக்கிறது.
    கண்களில் நீர் பெருகுகிறது. அற்புதக் காட்சி அது.
    தாங்களும் வருகை தாருங்கள்.
    அம்மனின் அருளைப் பெறுங்கள்.

    மீனாட்சி.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  4. http://uk.youtube.com/watch?v=ghwHmemK4uU
    CUT AND PASTE THE ABOVE LINK.
    இங்கேயும் இந்த வீடியோ இருக்கிறது.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspsot.com

    ReplyDelete
  5. You may listen to the song in a different raag also here
    http://uk.youtube.com/watch?v=P8mAfn6PP1M

    ReplyDelete
  6. வாங்க தாத்தா. ரொம்ப நல்லாருக்கு, இரண்டுமே. ரெண்டாவது என் மனசில் தோன்றிய மெட்டை ஒட்டியிருக்கு. மிக்க நன்றி. உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. புத்தாண்டிற்கு மிக நல்ல வேண்டுதல் அக்கா. வேண்டுவதெல்லாம் அவள் தரட்டும். நாம் வேண்டுவதையும் நாம் வேண்டுவதில் எவை எல்லாம் நமக்கு வேண்டுமோ அவற்றையும். தாயறிவாள் பிள்ளைக்கு வேண்டுவதெல்லாம்.

    ReplyDelete
  8. //வேண்டுவதெல்லாம் அவள் தரட்டும். நாம் வேண்டுவதையும் நாம் வேண்டுவதில் எவை எல்லாம் நமக்கு வேண்டுமோ அவற்றையும். தாயறிவாள் பிள்ளைக்கு வேண்டுவதெல்லாம்.//

    நல்லா சொன்னீங்க குமரா. அப்படியே ஆகட்டும் :) புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete