Tuesday, January 19, 2010

என்னுள்ளத் தாமரையில்...



என்னுள்ளத் தாமரையில்
குடிபுகுவாய் அம்மா
பெண்ணுள்ளம் ஏங்கிடுதே
பதில்தருவாய் அம்மா

(என்னுள்ள)

விண்ணுக்குள் உறைகின்ற
வேதத்தின் விழுப்பொருளே
கண்ணின்மணியே உமையே
கவின்மிகு கற்பகமே

(என்னுள்ள)

பண்டனெனும் அரக்கன்தனை
துண்டுதுண்டாய் துணித்தவளே
மாண்டவனாம் மன்மதனை
மீண்டுவரப் பணித்தவளே

வேண்டாத உயிர்களுக்கும்
வேண்டும்வரம் தருபவளே
தூண்டா மணிவிளக்கே
தூயவளே தேவியளே

(என்னுள்ள)

--கவிநயா

4 comments:

  1. manamurigi neengal isaitha ippadal
    sahana rahathil inge padapperukirathu.

    anbu koornthu varavum
    http://menakasury.blogspot.com
    subbu rathinam

    ReplyDelete
  2. இந்தப் பாடலும் நான் மனதில் நினைத்திருந்த மெட்டிலேயே அமைஞ்சிருக்கு தாத்தா :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  3. I need this Sri bala pic but good pic clarity

    ReplyDelete
  4. பாலா்மா படத்துக்கு இங்கே பாருங்க -

    http://www.hindugallery.com/

    Look for Bala-Tripurasundari

    ReplyDelete