Monday, April 12, 2010

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்!


சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - ஆதி
சக்தி தன்னை பக்தி செய்து பாதம் சூடுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சிவ
சக்தி யவள் நாமம் சொல்லி நாளும் ஓதுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - நல்ல
புத்தி கொண்டு சக்தி தொண்டு செய்து வாழுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - அந்த
சக்தி யன்றி சக்தி இல்லை என்று காணுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மாய
சக்தி தன்னை வென்று ஞான சக்தி தேடுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - சித்த
சுத்தி செய்து கொண்டு சக்தி அவளை நாடுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - மகா
சக்தி தன்னை நெஞ்சில் வைத்து நாளும் பேணுவோம்

சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம் - பரா
சக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்
பா மாலை சாற்றுவோம்!

***
புன்னாக வராளியில் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி!

***

--கவிநயா

9 comments:

  1. ஓம் சக்தி... ஓம் சக்தி ... ஓம் சக்தி...

    ReplyDelete
  2. //சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்//

    அறு சீர்ச் சிந்து நல்லா இருக்கு-க்கா! :)

    //- பரா
    சக்தி தன்னை நித்தம் போற்றி மாலை சாற்றுவோம்
    பா மாலை சாற்றுவோம்!//

    ஓ...பா மாலை சாற்றிடுவோம்!
    இது 191!
    200க்கு என்ன ஸ்பெஷல்-ன்னு நீங்களே சொல்லுங்க!

    ReplyDelete
  3. //ஓம் சக்தி... ஓம் சக்தி ... ஓம் சக்தி...//

    ஓம் சக்தி!

    வருகைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  4. //அறு சீர்ச் சிந்து நல்லா இருக்கு-க்கா! :)//

    நன்றி கண்ணா :)

    //200க்கு என்ன ஸ்பெஷல்-ன்னு நீங்களே சொல்லுங்க!//

    அதெப்படி? நீங்களும்தான் சொல்லணும் :)

    ReplyDelete
  5. //சிந்து பாடினது அருமை!//

    மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

    ReplyDelete
  6. //சக்தி சக்தி சக்தி யென்று சிந்து பாடுவோம்//

    சுத்தமான அறு சீர் சிந்து. அழகாக வடிவமக்கப்பட்டிருக்கிறது.
    கண்ணபிரான் ஸார்
    கரெக்டாதான் சொல்லி இருக்கிறார்.

    பாடிடவும் எளிதாக இருக்கிறது.
    பல ராகங்களில் பாடிடலாம் என்றாலும்
    புன்னாக வராளி உடன் புன்னகைத்து
    பாடு என்றது.
    இங்கே வந்து கேளுங்கள்.
    http://www.youtube.com/watch?v=d_d7v278XiA
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. நீங்கள் தேர்ந்தெடுத்த ராகத்தில் அருமையாக அமைந்திருக்கிறது தாத்தா. மிக்க நன்றி!

    ReplyDelete
  8. In this blog picture and songs are very good, please any one send/publish Sri Bala Thiripura sundhari devi pic

    ReplyDelete