![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCj2gDacHFf8shfTKKq5DpUezIzBjuCk_vhKTBtyFVJiXDZCQ7xbMeBfkRMYMItanOc3CxailoGMFrJ-kPv0R_EjpOTsVFcVJrka6nxqZN3gWdIHnI4a2Kr5H4rEnBZ6C4mJTIOi3lfg/s400/Kanakadurgamma.jpg)
சின்னச் செவ்விதழில்
சிறுநகை பூத்திருக்கும்
கருவிழியில் கருணைமழை
அருவியெனப் பொழிந்திருக்கும்
நெற்றித் திலகஒளி
நீள்நிலத்தை வழிநடத்தும்
கைவளைகள் கலகலத்து
காற்றினிலே ஒலிபரப்பும்
காதணியின் அசைவினிலே
கண்மலர்ந்து சொக்கிநிற்கும்
பொற்சிலம்புப் பாதங்கள்
பூஞ்சிறகாய் உயிர்அணைக்கும்!
--கவிநயா
அகிலத்தையே
ReplyDeleteஅவள் ஆளும் பொழுது
அவயங்கள் மட்டும்
அருள் பொழியாமல்
அடங்கி இருக்குமா?
சின்ன வரியில்
வண்ண கவிதை
நுதல் கண்டு நாணும் நிலா
ReplyDeleteவளர்மதியாய் வளைந்துவிடும்!
கரம் கண்டு வெட்கி மலர்
தரை நோக்கிக் குனிந்து விடும்!
//அகிலத்தையே
ReplyDeleteஅவள் ஆளும் பொழுது
அவயங்கள் மட்டும்
அருள் பொழியாமல்
அடங்கி இருக்குமா?//
அழகா சொன்னீங்க திகழ்! நன்றி :)
//நுதல் கண்டு நாணும் நிலா
ReplyDeleteவளர்மதியாய் வளைந்துவிடும்!
கரம் கண்டு வெட்கி மலர்
தரை நோக்கிக் குனிந்து விடும்!//
உண்மைதான் லலிதாம்மா! நன்றி :)