Monday, April 16, 2012

கனக தாரை - 16,17,18


16.
ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி
ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி
த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி
மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே


அளவில்லாச் செல்வங்களைஅருள்கின்ற அன்னையே போற்றி
ஆண்டியையும் அரசனாக்கும் அற்புதத் தேவியே போற்றி
ஐம்புலனுக்கும் இன்பந் தரும் அஞ்சுக மொழியாளே போற்றி
பதுமங்களும் நாணும் எழில் பங்கய விழியாளே போற்றி
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் திருவே போற்றி
மாறாத அன்பைத் தந்தருளும் தாயே போற்றி போற்றி!

17.
யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):
ஸந்தனோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!


கற்பகத் தருவே உன்றன் கடைக்கண் பார்வை வேண்டி
விருப்புடன் ஓர்நொடி யேனும் கருத்துடன் தொழுது நின்றால்
அளவில்லா பொருளும் வளமும் இன்பமும் அவர்க்குத் தருவாய்
அகிலத்தைக் காக்கும் அரங்கன் இதயத்தை ஆளும் தேவி
மனதாலும் வாக்காலும் செய்கின்ற செயல்கள் அனைத்தாலும்
அடிபணிந்து வணங்கு கின்றோம் அற்புதமே போற்றி போற்றி!

18.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)
ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே
த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்


பங்கயத்தில் பாங்காய் அமர்ந்து பங்கயங்கள் கரத்தில் ஏந்தி
பால் வெள்ளைப் பட்டுடுத்தி பதுமம் போல் வீற்றிருப்பாய்
மார்பினில் மாலைகள் தாங்கி மணக்கின்ற சந்தனம் பூசி
மாலவன் மனையாள் அடியார் மனமெல்லாம் மணம்பரப் பிடுவாய்
முடிவில்லா செல்வம் தந்து மூவுலகும் காக்கும் தேவீ
என்மேலும் கருணை வைத்தால் என்றும்நான் மகிழ்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

2 comments:

  1. you may listen here in three different raagas, arabhi, atana and anandha bhairavi

    though not well, i have striven hard to sing, so, pardom me if the song quality is not upto one's expectations.

    http://youtu.be/k1PrC7Cw0F8

    subbu rathinam

    ReplyDelete
  2. சுப்பு சார்,
    பாட்டைக் கேட்டு ரசித்தேன்;
    வெள்ளிக்கிழமைக்காலையில் கேட்பது மிகவும் பொருத்தமா இருந்தது;நன்றி!

    ReplyDelete