Monday, January 14, 2013

வென்றாள்,கொண்டாள்,வந்தாள்,பொழிந்தாள்!



னைருக்கும் இனிபொங்கல் வாழ்த்துகள்! 

சுப்பு தாத்தாடானா ராத்தில் அருமையாகப் பாடித் தந்து ங்கே. மிக்நன்றி தாத்தா!
 

கனவி லொரு காட்சி கண்டேனே என்றன்
மனதி லொரு மாற்றம் கண்டேனே
கவிதை யொன்று ஊறக் கண்டேனே அதுவும்
கரும்பெனவே இனிக்கக் கண்டேனே

நீல வண்ணம் வானில் வந்ததே, வந்து
நெஞ்சமெல்லாம் நிறைத்து நின்றதே
நூலிடையாள் வடிவம் கொண்டதே, கொண்டு
வேல் விழியால் என்னை வென்றதே!

செக்கர் வானம் சிவந்து வந்ததே, வந்து
செம்பருத்தி யாகச் சிரித்ததே
தேவியவள் வடிவம் கொண்டதே, என்னைத்
தென்றலாகித் தழுவிக் கொண்டதே!

பச்சை வண்ணம் பூசி வந்ததே, வந்து
பசுங் கிளியாய்த் தோளில் அமர்ந்ததே
பைங்கிளியாள் வடிவம் கொண்டதே, கொண்டு
பக்கத் துணையாகி வந்ததே!

வண்ணம் பல வாகி வந்ததே, வந்து
எண்ணமெல்லாம் நிறைந்து நின்றதே
மங்கையவள் வடிவம் கொண்டதே, கொண்டு
கங்கையென அருளைப் பொழிந்ததே!


--கவிநயா 


 

No comments:

Post a Comment