Tuesday, January 29, 2013




பவானி அஷ்டகம்
(ஆதி சங்கரர் எழுதிய பவாநியாஷ்டகத்தின் தழுவல் )

(1)ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி 


பெற்றோரோ,உற்றாரோ,மணங்கொண்ட துணையோ,
நான் பெற்ற மக்களோ,பணமோ ,என் அறிவோ,
என்னைக் கடைதேற்றவல்ல துணையல்ல;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(2)பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


தத்தளிக்கின்றேன் நான் பிறவிக்கடலில் ;
தாழ்வடைந்தேன் காமம், பேராசையாலே;
சிக்கித்தவிக்கின்றேன் சம்சார வலையில்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(3)ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

ஈயுமின்பம்,த்யானநிலையொன்றுமறியேன்;
தந்திரமோ,தோத்திர மந்திரமோ அறியேன்;
பூஜைவிதி,துறவுநிலை ஏதுமறியேன் ;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(4)ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!


புண்ணியமோ ,புனிதத்தலமோ நான் அறியேன்;
உன்னோடுளம் ஒன்றும்வழி,முக்திநெறி அறியேன்;
பக்திசெய்தலும் ,விரதவிதி ஏதும் அறியேன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(5)குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


தீயன என் எண்ணங்கள்,செயல்,சேர்க்கை யாவும்;
குல நெறி காத்திலேன்;நடத்தையிலும் கடையன்;
நோக்கு,வாக்கனைத்திலும் நானென்றும் தீயன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !


(6)ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


ஆக்கும் அயன்,காக்கும் அரி,அரன்,அமரர்தலைவன்,
இரவி,சந்திரன் எந்த தெய்வமும் நான் அறியேன்;
உன் பதங்களன்றி அரண் வேறு அறியேன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(7)விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

சர்ச்சையிலும்,துக்கம்,மதிமயக்கந்தனிலும்,
நெடும்பயணம்,நீர்,நெருப்பு,மலை,காடு எதிலும்,
சூழ்பகையிலும் என்றும் எனக்கபயம் நீயே!
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(8)அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நாதியற்ற ஏழை,மூப்பால் நோயாளியானேன்;
வலுவற்று சோர்ந்தேன்;இழி நிலையடைந்தேன்;
வினை சூழ்ந்த எனை என்றுங்காக்குந் துணை நீ!
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

No comments:

Post a Comment