Thursday, January 17, 2013

வர(ம்)வேண்டும்!



   வர(ம்)வேண்டும்!

(subbusir sings:
http://www.youtube.com/watch?v=-D-W-uT-mvw&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1)
ஜனித்ததொரு பாடல் மனத்தினிலே -ஜனனி!
        உனை உள்ளந்தனிலே நினைக்கையிலே!
இனிக்குது ஈஸ்வரி!நாவெல்லாம் -உந்தன்
       மகிமையைப் பாட்டாய் இசைக்கையிலே !

மணக்குது இதயம் ,அதிலுந்தன் தூய
         மலர்ப்பதம் அருள்மடல் விரித்ததனால் ;
பனிக்குது கண்கள் பரவசத்தால் -அதற்குன்
         புனிதத் திருக்காட்சி கிடைத்ததனால் !

ஜனித்ததொரு பாடல் மனத்தினிலே -ஜனனி!
         உனை உள்ளந்தனிலே நினைக்கையிலே!
இனிக்குது ஈஸ்வரி!நாவெல்லாம் -உந்தன்
         மகிமையைப் பாட்டாய் இசைக்கையிலே !

எனது மனம் கதம்பவனமாகி -அதில் நீ
              வளையவந்து விளையாடும் வரமருள்வாய்  !
தினமொரு புதுப்பூந்தமிழ்த்துதியாலுனை
             அலங்கரித்துப் பார்க்கும் திறமருள்வாய்  !

ஜனித்ததொரு பாடல் மனத்தினிலே -ஜனனி!
         உனை உள்ளந்தனிலே நினைக்கையிலே!
இனிக்குது ஈஸ்வரி!நாவெல்லாம் -உந்தன்
         மகிமையைப் பாட்டாய் இசைக்கையிலே !

1 comment:



  1. i have tried once and put it in youtube.
    http://www.youtube.com/watch?v=G3Annt1ss4o

    The rendering is tolerable only after the first stanza. I shall try once again

    subbu thatha.
    r u able to recognize the old song?

    ReplyDelete