Monday, June 24, 2013

மதி மயக்கம் தீர்த்து விடு!



சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



அம்மா என் மனதை நேராய் ஆக்கு
அன்பாய் உனை அடையும் வழியைக் காட்டு!

தனியே தவிக்கின்றேன் தத்தளித்து நடக்கின்றேன்
கனியே வந்தெனெக்குக் கைகொடுத்தால் ஆகாதோ?
கதியே என்றோடி உன்னிடத்தில் வந்து விட்டேன்
மதியே என்மதிக்கு ஒளிதந்தால் ஆகாதோ?

நாளும் கழியுதடி நானு முன்னைப் பாராமல்
உள்ளம் சோருதடி ஒரு சொல்லும் கேளாமல்
காதில் விழவில்லையோ கன்றின் குரல் கேட்கலையோ
மாதே வந்து விடு மதி மயக்கம் தீர்த்து விடு!


--கவிநயா

7 comments:

  1. உருக வைக்கும் வரிகள் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. /// நாளும் கழியுதடி நானு முன்னைப் பாராமல்
    உள்ளம் சோருதடி ஒரு சொல்லும் கேளாமல் ///

    எனக்கும் தான் அம்மா !

    அழகான வரிகள் ,

    நன்றி அக்கா !

    ReplyDelete
  3. உருகி அழைத்த உணர்வுகள் கண்டு உள்ளம் குளிர்வாள் அம்மா என்றும் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  4. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete
  6. மிக்க நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete
  7. சுப்பு தாத்தா பாடியதை இணைத்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்!

    ReplyDelete