Monday, March 24, 2014

செல்லும் இடமறியேன்...


சுப்பு தாத்தா மதுவந்தியில் மனமுருகப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு உருகுங்கள்... மிக்க நன்றி தாத்தா!


செல்லும் இடமறியேன்
சேற்றின் குணம் நானறியேன்
அன்னை உனை அடைய
பேதை ஏதும் வழியறியேன்
(செல்லும்)

கண்ணிருந்தும் பார்வையில்லா
குருட்டுப் பிள்ளை நானம்மா
கண்ணொளியாய் நீயிருந்து
வழிகாட்ட வா அம்மா

வாயிருந்தும் வார்த்தையில்லா
ஊமைப் பிள்ளை நானம்மா
வாய்மொழியாய் நீயிருந்து
வழிகாட்ட வா அம்மா
(செல்லும்)

கதறும் கன்றின் குரல்
கேட்கலையோ, கேட்கலையோ?
பதறும் பிள்ளை குரல்
கேட்டும் வர மனமில்லையோ?

சேற்றில் புதையும் முன்னே
சேர்த்தெடுக்க வா அம்மா
காற்றெனக் கடுகி வந்து
கனிந்து என்னைக் கா அம்மா!
(செல்லும்)


--கவிநயா

2 comments: