Wednesday, October 1, 2014

சரணம் சரணம் சரஸ்வதி !



சரணம் சரணம் சரஸ்வதி !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ  நீக்கு மனமருளே.


செங்கமலத்துதித்த  சதுர்முகன் பத்தினி !
வெண்கமலம் அமர்ந்து  உலகாளும் உத்தமி !
வெண்ணன்ன வாகினி!வரப்ரதாயினி !
வெண்கலையில் மின்னுந்தேவி !சுஹாசினி !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ  நீக்கு மனமருளே.


ஏட்டுச்  சுவடியும்   , அக்ஷர  மாலையும் 
ஏந்திடுங்கரத்தாளே !பணிந்தேனுன்  பூந்தாளே !
மெய்ஞான வாரிதியே !பாராளும் பாரதியே !
ஸ்ருங்ககிரி சாரதையே!சரணம் சரஸ்வதியே !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ  நீக்கு மனமருளே.


No comments:

Post a Comment