சுப்பு தாத்தா மிக இனிமையாகப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!
உன்னைக் கண்டு முறையிடவே வந்தேன்
திருமயிலை கற்பகமே
(உன்னைக்)
குறைகளெல்லாம் மறந்ததம்மா
மலர்முகத்தைக் கண்டதுமே
பிறையணிந்த நாயகியுந்தன்
திருமுகத்தைக் கண்டதுமே
(உன்னைக்)
மயிலுருவில் வந்தவளே
மகவைக் கொஞ்சம் பாராயோ?
மயிலறகாய் இதயம் வருடி
மதி மயக்கம் தீராயோ?
(உன்னைக்)
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://thirumylai.blogspot.com/2011/09/2.html

No comments:
Post a Comment