Monday, April 13, 2015

அடைக்கலம் தருவது உன்பதமே!

அம்மா உன்பதம் தேடுகிறேன்
அன்பாலே உனை நாடுகிறேன்
பண்ணால் உன்புகழ் பாடுகிறேன்
கண்ணாய் உனைதினம் போற்றுகிறேன்
(அம்மா)

அங்குச பாசம் அங்கையிலே
பொங்கிடும் அருளுந்தன் கண்களிலே
கங்கையை அணிந்தவன் மேனியிலே
பங்கொன்று கொண்ட என் பார்வதியே
(அம்மா)

வெம்மையைத் தணிப்பது உன்நிழலே
வேதனை தீர்ப்பது உன்னருளே
அன்பினைப் பொழிவது உன்விழியே
அடைக்கலம் தருவது உன்பதமே!
(அம்மா)


--கவிநயா 
 

2 comments:

  1. "அன்பினைப் பொழிவது உன்விழியே
    அடைக்கலம் தருவது உன்பதமே!"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
  2. நன்றி ஷைலன்!

    ReplyDelete