Monday, May 25, 2015

அம்மா...


சுப்பு தாத்தா காவடிச் சிந்து மெட்டில் அனுபவித்துப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



அம்மா உந்தன் திருமுகமே

எந்தன் நெஞ்சில் நீந்திடுமே

அம்மா உன் திருநாமம்

நாவில் நடனம் ஆடிடுமே

(அம்மா)



உன்னை எண்ணும் ஓர் நொடியில்

துன்பம் யாவும் மறந்திடுமே

உந்தன் கருணைக் கண் பட்டால்

வினைகள் எல்லாம் தொலைந்திடுமே

(அம்மா)



அம்மா உந்தன் பெருமைகளை

அடியவள் சிறிதும் அறியேனே

ஆனால் நீ என் தாய் என்னும்

உண்மை மட்டும் அறிவேனே



அம்மா எந்தன் குரல் கேட்டு

ஒரு நாள் ஓடி வந்திடுவாய்

அன்பால் உந்தன் பதநிழலில்

இடமும் எனக்குத் தந்திடுவாய்

(அம்மா)


-கவிநயா

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  2. அம்மா உந்தன் பெருமைகளை
    அடியவள் சிறிதும் அறியேனே
    ஆனால் நீ என் தாய் என்னும்
    உண்மை மட்டும் அறிவேனே

    நானும் தான் அம்மா !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஷைலன்!

      Delete