Monday, June 8, 2015

மற(று)க்காமல் வர வேண்டும்!


த்விஜவந்தி ராகத்தின் சாயலில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியது. சுப்பு தாத்தாவிற்கு 73 வயது நிறைவடைகிறதாம். அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா!



விடையேறி வர வேண்டும்

சிவனோடு வர வேண்டும்

உடம்போடு உயிர் உறவு

அறும் முன்னே வர வேண்டும்!



உள்ளத்தில் வர வேண்டும்

உன்நினைவைத் தர வேண்டும்

ஊனுருக உன் புகழைத்

தினம் பாடும் வரம் வேண்டும்!



கரும்பினிய என் தேவி

காப்பாற்ற வர வேண்டும்

கறுத்திட்ட கண்டனுடன்

கடிதேகி வர வேண்டும்!



குருவாகி வர வேண்டும்

குறை தீர்க்க வர வேண்டும்

மறை போற்றும் மாதவியே

மறு(ற)க்காமல் வர வேண்டும்!


--கவிநயா 

6 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. "விடையேறி வர வேண்டும்
    சிவனோடு வர வேண்டும்
    உடம்போடு உயிர் உறவு
    அறும் முன்னே வர வேண்டும்!"


    அழஹான வரிகள் !
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்.

      Delete
  3. அழகான அற்புதமான பாடலை சுப்புத் தாத்தா பாடக்கேட்டு இங்கு வந்தேன். மனம் மகிழ்ந்தேன். தொடருங்கள் தோழி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சசிகலா.

      Delete