Monday, July 27, 2015

ஜகம் போற்றும் ஜனனீ!

சுமையெல்லாம் சுகமாகும் உன்னை நினைத்தால்
உமையவளே உன் தாளில் எண்ணம் பதித்தால்
(சுமையெல்லாம்)

ஜகம் போற்றும் ஜனனீ என் அகம் போற்றும் ஜகம் நீ
இக பர சுகமெல்லாம் தரும் சிவ காமினீ
(சுமையெல்லாம்)

நாயேன் எனினும் உன்னை நினைத்து விட்டேன்
நாயகி உன் பாதம் நெஞ்சினில் பதித்து விட்டேன்
சேயே என ஓடி தாயே வர வேண்டும்
மாயை மருள் நீக்கி அருளைத் தர வேண்டும்
(சுமையெல்லாம்)


--கவிநயா 
 

2 comments: