Monday, September 21, 2015

நீயேதான் வந்தாயோ?


ஆபோகியில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



நீயேதான் என் நினைவில் வந்தாயோ? உன்னை

அம்மா என்றழைக்கச் சொல்லித் தந்தாயோ?

(நீயேதான்)



ஊரெல்லாம் கேட்க உந்தன் பேரைச் சொல்லவோ?

உலகெல்லாம் போற்றும் உந்தன் புகழைச் சொல்லவோ?

(நீயேதான்)



உன்னை எண்ணும் போதில் எந்தன் உள்ளம் துள்ளுது

அந்தத் துள்ளலிலே தெள்ளு தமிழ்ப் பாடல் சொல்லுது

புத்தியெல்லாம் உன் நினைவால் பக்தியானது

அந்த பக்தியினால் சித்தமெல்லாம் சுத்தியானது

(நீயேதான்)


--கவிநயா 


3 comments: