Monday, October 5, 2015

மீனாட்சியின் மாட்சி

மோஹனத்தில் சுப்பு தாத்தா சுகமாகப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!



விழியாலே காப்பவளே மீனாட்சி - தமிழ்
மொழியாலே பாட வந்தேன் உன் மாட்சி
(விழியாலே)

மதுரை மாநகரை ஆள்பவளே, என்
மனதில் என்றென்றும் வாழ்பவளே
(விழியாலே)

சின்னஞ் சிறுமியென செந்தீயினில் உதித்தாய்
வண்ணத் திருப்பாதம் எந்தன் நெஞ்சில் பதித்தாய்
கன்னல் மொழியாளே முக்கண்ணனை வரித்தாய்
முன்னைப் பழ வினைகள் பொசுக்கிட மனம் வைத்தாய்
(விழியாலே)


--கவிநயா



5 comments: