Monday, February 22, 2016

கால்கள் பிடித்தேன் காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 8

அபயம் அபயம் என்று வந்தேன்
அம்மா என்றுனை அழைத்து வந்தேன்
சிரமம் என்று பாராமல்
சிரத்தில் பதம்வைத் தருளாயோ?
விதியின் சுழலில் உழன்றிருந்தேன்
கதிநீ என்றுனைச் சரணடைந்தேன்
கால்கள் பிடித்தேன் காவாயோ?
கனமழையாய்க் கருணை பொழியாயோ?


--கவிநயா

(முற்றும்) 

2 comments:

  1. சிரமம் என்று பாராமல்
    என் சிரத்தின் மீதும் பதம்வைத் தருளாயோ!

    அழகான அம்பிகை அஷ்டகம்,

    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்!

      Delete