Monday, February 29, 2016

மாங்காட்டில்...

சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!


மாங்காட்டில் தவம் செய்த தாயே
பூங்காற்றாய் புவி மீதில் வந்தாயே நீயே
(மாங்காட்டில்)

அக்கினியின் நடுவே உக்கிரத் தவம் செய்தாய்

ஊசிமுனைமீதில் ஒற்றை விரலில் நின்றாய்
கடுந்தவம் செய்தாயே கணவனை நீ அடைய
அதிலொரு துளியேனும் செய்வேனோ உனை அடைய
(மாங்காட்டில்)

ஒவ்வொரு நொடியிலும் உன் பெயர் நான் சொல்ல

நெஞ்சமெல்லாம் உனை நிறைத்து நினைந்து நினைந்துருக
தரையிட்ட மீன் போலே உனக்கென நான் துடிக்க
விரைவினில் வந்தருள்வாய் பிள்ளை எந்தன் உள்ளம் களிக்க
(மாங்காட்டில்)


--கவிநயா 

No comments:

Post a Comment