Monday, March 7, 2016

இதயமெல்லாம்...



இதயமெல்லாம் உன்னை நிறைத்து வைத்தேன்
உதயமென்றுன் வரவைக் குறித்து வைத்தேன்
(இதயமெல்லாம்)

வழிமேல் விழி வைத்துப் பார்த்திருக்கேன், உந்தன்
விழிகரு ணைபொழியக் காத்திருக்கேன்
(இதயமெல்லாம்)

விழிவழியும் நீரில் கோலமிட்டு, எந்தன்
இதயக் கமலம் அதன் நடுவில் இட்டு
சந்தத் தமிழ் மாலைகளால் அலங்கரித்து, உந்தன்
தங்கத் திருத்தாள் பதிக்க மலர் விரித்து
(இதயமெல்லாம்)


--கவிநயா 

No comments:

Post a Comment