Monday, February 8, 2016

என்ன தவம் செய்தனை ?


என்ன தவம் செய்தனை ?




[1]என்ன தவம் செய்தனை  ? வெண்ணிலவே !
    அன்னை தன் சென்னியில்  மலரென அணிந்திட
    என்ன தவம் செய்தனை ?
பாராளும் பேரழகி கார்குழலில் அமரும்
பேறுதனைப் பெற்றே பெருமிதமடைந்திட
என்ன தவம் செய்தனை ?




[2] என்ன தவம் செய்தனை  ? அஞ்சுகமே !
     அன்னையின் வேயுறு தோளிலமர்ந்திட
     என்ன தவம் செய்தனை  ?
தேன்மொழித்தேவியின்  மேனியமர்ந்து அவள்
வாணியைச்சுவைத்துப் பயிலும் சுகம்பெற
என்ன தவம் செய்தனை  ?




[3]என்ன தவம் செய்தனை  ?செங்கரும்பே!
     அன்னைப் பூங்கரத்தால் வில்லெனத்தாங்கிட
     என்ன தவம் செய்தனை  ?
மதனை எரித்த ஈசன் இதயந்தனைக் கவர்ந்த
மதங்கன்மகள் மலர்க் கரம் உன்னை ஏந்திட
என்ன தவம் செய்தனை  ?

2 comments:

  1. அழஹான வரிகள் !
    நன்றி லலிதா அம்மா!

    ReplyDelete