Monday, March 14, 2016

அழகே அருளமுதே!


சுப்பு தாத்தாவுக்கு ரொம்பப் பிடிச்சிட்டதாம்... அவர் வாலாஜியில் வண்ணமுறப் பாடியது இங்கே....மிக்க நன்றி தாத்தா!


அழகே அருளமுதே!
சிவையே கனியமுதே!
சிந்தையுள் ஊறி நிற்கும்
கருப்பஞ் சாறமுதே!
(அழகே)

எண்ணி எண்ணிப் பாட வைத்தாய்!
உன் நினைவில் ஆட வைத்தாய்!
அன்னை என்று நாட வைத்தாய்!
அடியவரைக் கூட வைத்தாய்!
(அழகே)

விந்தை யுந்தன் மாயை!
செய்வ துந்தன் லீலை!
தஞ்சமென்று வந்தவர்க்குன்
திருவடி நிழல் சோலை!
(அழகே)



--கவிநயா


No comments:

Post a Comment