Monday, March 28, 2016

அருள் வேண்டும்!



அம்மா உந்தன் அருள் வேண்டும்!
தந்தான் எந்தன் இருள் நீங்கும்!
வருவாய் குருவாய் தருவாயே!
மருள் நீக்கி அருள் புரிவாயே!
(அம்மா)

கருணை பொழியும் கருமுகிலே!
கருவிழி யிரண்டும் அருட் கடலே!
இருவினை களையும் முழுமதியே!
சிறுமதி யேனுக்கும் அருள் புரியேன்!
(அம்மா)

சிந்தையில் நீந்திடும் உன் முகமே!
விந்தையில் ஆழ்ந்திடும் என் மனமே!
எந்தையுடன் வந்து இக் கணமே!
தந்திட வேணுமுன் பொற் பதமே!!
(அம்மா)


--கவிநயா


No comments:

Post a Comment