Monday, March 21, 2016

முட்களும் மலராகும்



நீலாம்பரி ராகத்தில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியது... மிக்க நன்றி தாத்தா! 



பச்சை வண்ணப் பட்டுடுத்தி

இச்சை கொள்ள வைப்பவளே!

துச்சமென துக்கமெல்லாம்

மிச்சமின்றித் தீர்ப்பவளே!


நச்சுஉண்ட நாயகனை

பட்சம்கொண்டு காத்தவளே!

மச்சவிழிப் பார்வையால்எம்

அச்சம்போக்கும் தூயவளே1



பக்கத்திலே நீயிருந்தால்

சொர்க்கமென்ன சொந்தமென்ன!

மக்கள்குறை தீர்ப்பதற்கு

நேரமென்ன காலமென்ன!



சிக்கலெல்லாம் ஓடிவிடும்

சிந்தையிலே நீயிருந்தால்!

முட்களெல்லாம் மலராகும்

மங்கையுந்தன் அருளிருந்தால்!


---கவிநயா 


1 comment: